மீனவர்களுக்கு வழங்கப்படும் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என தேர்தல் பிரசாரத்தின்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்திருந்த நிலையில், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் அதுகுறித்த அறிவிப்பு இடம்பெறாதது மீனவர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக மீனவ பெண்கள் புரட்சிப் பட இயக்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மீனவ பெண்கள் புரட்சிப் பட இயக்கத்தைச் சேர்ந்த டிலைட்டா ரவி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூறியதாவது:
“தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தேர்தல் பிரசாரத்தின்போது மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தற்போது வழங்கப்பட்டு வரும் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையான ரூ.8 ஆயிரத்தை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பை மீனவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரவேற்றனர். குறிப்பாக மீன்பிடித் தடைக்காலத்தில் கடலுக்கு செல்ல முடியாமல் வருமானத்தை இழக்கும் மீனவர் குடும்பங்களுக்கு இந்த நிவாரணத் தொகை பெரும் உதவியாக இருக்கும் என நம்பினர்.
ஆனால் கடந்த வாரம் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில், மீனவர்களின் தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.20 ஆயிரமாக உயர்த்துவது தொடர்பாக எந்தவித அறிவிப்பும் நிதியமைச்சரால் வெளியிடப் படவில்லை. தமிழக முதல்வரும் இதுகுறித்து எந்தவிதமான பதிலும் தெரிவிக்கவில்லை. தேர்தல் பிரசாரத்தின்போது அறிவிக்கப்பட்ட வாக்குறுதியை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி, மீனவர்களுக்கான தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
இந்த அறிவிப்பை மீனவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி வருகின்றனர். தமிழக அரசு உடனடியாக ரூ.20 ஆயிரம் தடைக்கால நிவாரணத்தை அறிவிக் காவிட்டால், மீனவர்கள் ஒன்றுதிரண்டு தமிழக அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்” என்று டிலைட்டா ரவி தெரிவித்தார்.
தூத்துக்குடி
“தேர்தல் வாக்குறுதியான ரூ.20 ஆயிரம் தடைக்கால நிவாரணம் எங்கே?” தவெக அரசுக்கு மீனவர் பெண்கள் கேள்வி – உடனடியாக அறிவிக்காவிட்டால் போராட்டம்: டிலைட்டா ரவி எச்சரிக்கை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
டாஸ்மாக் கடை திறக்கும் முன்பே ‘கள்ளச்சந்தை’ திறப்பு! தூத்துக்குடியில் 15 பிராண்டி பாட்டில்களுடன் ஒருவர் கைது!!
அடுத்த
குடிநீர் பிரச்சனை... தொகுதி எம்.எல்.ஏ. எங்கே? அமைச்சர் ஸ்ரீநாத்திடம் தூத்துக்குடி மக்கள் சரமாரி கேள்வி?
இதையும் படிக்கலாம்
சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை!!
01 Sep 2026
தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு: கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
01 Sep 2026
39 ஆண்டுகளாக தீராத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை! “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதல்வர் விஜய் வாக்குறுதி நிறைவேறுமா?
29 Aug 2026
சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்ற வேண்டும்!மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
29 Aug 2026