தூத்துக்குடி மாநகராட்சியில் மழைக்கால பணிகளை மேயர் ஜெகன்பொியசாமி காரை விட்டு விட்டு, இருசக்கர வாகனத்திலும் கால்நடையிலும் சென்று ஆய்வு செய்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மழைக்காலத்தில் நீர் தேங்காத வகையில் கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மேயர் ஜெகன்பொியசாமி அதிகாலை முதல் 3 வார்டுகளுக்குள் சென்று ஒவ்வொரு கால்வாயையும் பார்வையிட்டார். ரயில்வே தண்டவாளம், சந்தை ரோடு, எஸ்பிஜி கோவில், வ.உ.சி சந்தை, அந்தோனியார் கோவில், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் அடைப்புகளை கண்டறிந்து உடனடியாக அதிகாரிகளுக்கு சுத்தம் செய்ய உத்தரவிட்டார்.
அதிகாரிகளிடம் மட்டும் அல்லாமல், பொதுமக்களிடமும் நேரடியாகப் பேசி, சாலை வசதிகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் குறித்து கேட்டறிந்தார்.
“மாநகர மக்களுக்காகவே எனது பணி. எந்த வழியிலாவது அதை செய்து முடிக்கிறேன்” என்று அவர் தெரிவித்தது மக்களிடையே மேலும் பெருமையைக் கூட்டியது.
பொதுவாக கார் பவனியில் ஆய்விற்கு செல்லும் நிலையை மாற்றி, பைக் ரைடு ஆய்வு மேற்கொண்ட மேயர், அதிகாலை 4 மணி நேரம் சிறு குறு சாலைகளுக்குள் சென்று பார்வையிட்டது தற்போது தூத்துக்குடி முழுவதும் பேசப்படும் விஷயமாக உள்ளது.
தூத்துக்குடி
“மேயரின் பைக் ரைடு ஆய்வு” – தூத்துக்குடி மக்களிடம் பாராட்டைப் பெற்ற ஜெகன்பொியசாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி நகர முன்னேற்றத்திற்காக – மேயர் ஜெகன் பெரியசாமி தூர் வாரும் பணிகளை ஆய்வு!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி மாமன்றக் கூட்டம் – மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை!!
01 Sep 2026
தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு: கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
01 Sep 2026
39 ஆண்டுகளாக தீராத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை! “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதல்வர் விஜய் வாக்குறுதி நிறைவேறுமா?
29 Aug 2026
சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்ற வேண்டும்!மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
29 Aug 2026