தூத்துக்குடி மாநகராட்சி 50 வார்டு பகுதிக்கு உட்பட்ட கணேசன் காலனி 3 வது தெரு பகுதியில் உள்ள மின் கம்பத்தில் மின் கம்பி ஒன்று அருந்து விழுந்த நிலையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கணேசன் காலனி 3 வது தெருவில் உள்ள மின்கம்பத்தில் உள்ள மின் கம்பி ஒன்று அருந்து கிடைப்பதாகவும், அதனால் விபத்துகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதை அறிந்து அந்த பகுதி மக்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் 50 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரவணகுமார் அவர்களுக்கு தொலைபேசி வழியாக தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த சில நிமிடங்களில் கவுன்சிலர் சரவணகுமார் உரிய இடத்திற்கு விரைந்து சேதமடைந்த நிலையில் காணப்படும் மின் கம்பங்களை பார்வையிட்டு இரவு நேரங்களில் பணி செய்யக்கூடிய மின்வாரிய பணியாளர்களை அழைத்து மின் கம்பங்களில் இருந்து அருந்து விழுந்த மின்கம்பிகளை உடனே சரி செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விபத்துகள் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுத்தார்.
என் நேரமும் தூங்காது தம் பகுதி வார்டு மக்களுக்காக அயராது உழைத்து கொண்டு சேவல் கூவும் முன்பே தன் பணியை தொடங்கிய 50 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரவணகுமார் மற்றும் மின்வாரிய பணியாளர்களுக்கு 50 வது வார்டு பகுதி மக்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
தூத்துக்குடி
சேவல் கூவும் முன்பே தன் பணியை தொடங்கிய கவுன்சிலர்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தியாவிற்கு வழிகாட்டியாக திகழ்கிறார் - அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம்!!
அடுத்த
தூத்துக்குடி தொழில் நிறுவனங்களுக்கு காவல்துறை கொடுத்து மெஸேஜ்!!
இதையும் படிக்கலாம்
சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை!!
01 Sep 2026
தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு: கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
01 Sep 2026
39 ஆண்டுகளாக தீராத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை! “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதல்வர் விஜய் வாக்குறுதி நிறைவேறுமா?
29 Aug 2026
சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்ற வேண்டும்!மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
29 Aug 2026