தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று பரபரப்பான நிலை ஏற்பட்டது.
திருச்செந்தூர் ஆலந்தவை அசுக்குழை குடியிருப்பைச் சேர்ந்த எம். பட்டுநாச்சியார் (50) என்ற பெண், தனது மகன் மணிகண்டனை காதல் தொடர்பு காரணமாக நட்டார் என்பவர் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து கொலை செய்ததாகக் கூறி, அதற்கு நீதி கிடைக்க வேண்டுமென கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவர் அளித்த மனுவில், “எனது மகன் மணிகண்டனை நட்டார் குடும்பத்தினர் சேர்ந்து 35 முறை குத்தி கொலை செய்தனர். இதில் முக்கிய குற்றவாளி கட்டார் என்பவர் ஜாமினில் வெளியில் வந்து மீண்டும் எங்கள் குடும்பத்தினரை மிரட்டிக் கொண்டிருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் நிலையில் உள்ளோம். எனவே எங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்கி, குற்றவாளிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,”
என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், திருச்செந்தூர் டிஎஸ்பி அலுவலகத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில், சில போலீஸ் அதிகாரிகள் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு வழக்கை பாதிக்க முயற்சி செய்கிறார்கள் என்றும், இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த தர்ணா போராட்டத்தால் சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
தூத்துக்குடி
மகனின் கொலைக்குத் தகுந்த நீதி கோரி — மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி தனசேகரன் நகரில் புதிய நூலக கட்டுமானப் பணிகள் வேகமாக முன்னேறும் நிலையில் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு!!
அடுத்த
மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தூத்துக்குடி தொழிலாளி — குடும்பம் கலங்கல்; ஆட்சியரிடம் மனு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026