தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதிமுக எதிர்க்கட்சி கொறடா மற்றும் வழக்கறிஞர் மந்திரமூர்த்தி பல்வேறு பொதுநல கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.
அவர் தெரிவித்ததாவது தமிழ்நாடு அரசு சார்பாக பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் சலுகை விலை வீட்டுமனைகள் இன்னும் தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே, மாநகராட்சி எல்லைக்குள் பத்திரிகையாளர்களுக்கு உடனடியாக வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், தூத்துக்குடி தியேட்டர்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை, வெளியில் உள்ள கடைகளில் விற்பனை செய்யும் விலையை விட பல மடங்கு அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்தி, அவற்றின் சுகாதாரத் தரத்தை மாநகராட்சி ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரினார்.
அத்துடன், 47வது வார்டின் லயன்ஸ் டவுன் பகுதியில் உள்ள சுமார் 55 குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய மாநகராட்சி எடுத்துள்ள நடவடிக்கையை அவர் எதிர்த்தார். குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட சட்டபூர்வ பட்டாக்களை ரத்து செய்யும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மந்திரமூர்த்தி முன்வைத்த கோரிக்கைகள் மாநகராட்சி கூட்டத்தில் கவனத்தை ஈர்த்தன.
தூத்துக்குடி
பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனை வழங்கவும் – தியேட்டர் உணவு விலை உயர்வை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை அவசியம்! தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கொறடா மந்திரமூர்த்தி வலியுறுத்தல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாநகராட்சி கூட்டத்தில் 50வது வார்டு வளர்ச்சி பணிகள் குறித்து கவுன்சிலர் சரவணகுமார் பேச்சு!!
அடுத்த
பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனை வழங்கவும் – தியேட்டர் உணவு விலை உயர்வை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை அவசியம்! தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கொறடா மந்திரமூர்த்தி வலியுறுத்தல்!!
இதையும் படிக்கலாம்
சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை!!
01 Sep 2026
தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு: கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
01 Sep 2026
39 ஆண்டுகளாக தீராத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை! “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதல்வர் விஜய் வாக்குறுதி நிறைவேறுமா?
29 Aug 2026
சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்ற வேண்டும்!மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
29 Aug 2026