தூத்துக்குடி மாவட்டத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்களின் தலைமையில் நடந்தது.
தமிழ்நாடு காவல்துறையின் வழிகாட்டுதலின்படி நடைபெறும் இக்கூட்டத்தில், காவல் நிலையங்களில் முன்பே புகார் அளித்த 5 பேரும், புதியதாக மனு அளிக்க வந்த 56 பேரும் கலந்து கொண்டனர். மொத்தம் 61 மனுதாரர்கள் இன்று தங்கள் பிரச்சினைகளை நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முன்வைத்தனர்.
மக்கள் முன்வைத்த ஒவ்வொரு குறையையும் கவனத்துடன் கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உடனடி விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
புதன்கிழமைகளில் நடைபெறும் இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில், காவல் நிலையங்களில் வழங்கிய புகார் தொடர்பான விசாரணையில் திருப்தி அடையாதவர்கள் நேரடியாக மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வந்து தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் புதன்கிழமைகள் மக்கள் குறைகள் கேட்கும் நாளாக மாறின!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் அரசியலமைப்பு தின உறுதிமொழி நிகழ்வு!!
அடுத்த
கோவில்பட்டியில் சமூக நீதி பயணம்: “ஒடுக்கப்பட்டோரின் அரணாக முதல்வர் ஸ்டாலின்” – ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026