தூத்துக்குடியில் பட்டா கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க முறைப்படுத்தி பட்டா வழங்கப்படும் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் கணினி பட்டா விண்ணப்பிக்கும் முகாம் நடைபெற்றது. திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். கனிமொழி எம்.பி. பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பொது மக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டு பேசுகையில் "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க தூத்துக்குடியில் முதற்கட்டமாக நடைபெற்ற மனுக்கள் பெறப்படும் நிகழ்ச்சியில் 3,624 பேர் மனு அளித்திருந்தனர். அதில் உள்ள ஆவணங்கள் அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்டு வருவாய்துறையினர் சரி பார்த்து பட்டா வழங்கப்படுகிறது.
இதற்கு ஆட்சியர், ஒரு குழு அமைத்துள்ளார். அந்தக் குழுக்கள் முழுமையாக இந்த பணியை செய்து வருகின்றனர். இரண்டு கட்டமாக கணினி பட்டா இதுவரை 282 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மற்ற அனைவருக்கும் முறையாக முறைப்படுத்தி ஆய்வுகள் மேற்கொண்டு வழங்கப்படும். இதற்கான முழு பங்களிப்பு கலெக்டரும் ஈடுபட்டு பணியாற்றுகிறார். எல்லோரும் ஒத்துழைப்பு வழங்கி இந்த வரலாற்று நிகழ்வுகளுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று பேசினார்.
விழாவில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கோட்டாட்சியர் பிரபு, மேயர் ஜெகன் பெரியசாமி, உதவி பொறியாளர் சரவணன், மாநக திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை செயலாளர் கீதா முருகேசன், கனகராஜ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் அபிராமி நாதன், கவிதா தேவி, துணை அமைப்பாளர்கள் அருணா தேவி, பிரபு, நாகராஜன், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன் ஜேக்கப், மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
தூத்துக்குடி
முதல்வரின் உத்தரவுக்கிணங்க முறைப்படுத்தி அனைவருக்கும் பட்டா வழங்கப்படும் - அமைச்சர் கீதா ஜீவன் தான் தகவல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மத்திய அரசை கண்டித்து தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் இளையராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
அடுத்த
ஆவின் பாலகம் திறப்பு விழா - அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026