சென்னை, நவம்பர் 19 — தமிழக பொதுநூலகத் துறையில் சிறப்புப் பணியாற்றி மாநில அளவில் குறிப்பிடத்தக்க சேவையை வழங்கிய நூலகர்கள், வாசகர் வட்டத் தலைவர்கள் மற்றும் நூலக வளர்ச்சிக்கு பங்களித்த நன்கொடையாளர்களுக்கு மாநில அரசு சார்பில் வழங்கப்படும் 2025 ஆம் ஆண்டிற்கான விருதுகள் இன்று வழங்கப்பட்டன.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை நடைபெற்ற இவ்விழாவில், சிறந்த நூலகர்களுக்கு “டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது”, வாசகர் வட்டத் தலைவர்களுக்கு “நூலக ஆர்வலர்” விருது வழங்கப்பட்டது.
மேலும், அதிக உறுப்பினர் சேர்க்கை சாதித்த நூலகங்கள், கட்டிடம் பராமரிப்பில் சிறந்து விளங்கியவர்கள், நூலக மேம்பாட்டிற்கான நன்கொடையாளர்கள் ஆகியோர் கேடயம் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நூலக வளர்ச்சி, வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் சமூகத்தின் அறிவாற்றல் முன்னேற்றத்தை முன்னிறுத்தும் வகையில் மாநில அரசு ஆண்டுதோறும் வழங்கும் இந்த விருதுகள், நூலகச் சேவையின் மதிப்பையும் சமூகத்தில் அதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன.
தூத்துக்குடி
தமிழகத்தில் நூலகச் சேவையை உயர்த்திய முன்னோடிகளுக்கு மாநில அரசு விருதுகள் வழங்கப்பட்டன!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தலித்-பழங்குடி, பெண்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்!!
அடுத்த
தூத்துக்குடியில் நடைபெற்ற மிளகாய் வற்றல் மஹா யாகம் — பக்தர்களின் பலநல வாழ்வுக்காய் பிரத்தியங்கிராதேவியின் அருள் வழிபாடு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026