தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல வாராந்திர குறைதீர்க்கும் கூட்டம் இன்று பழைய மாநகராட்சி வளாகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையிலும், ஆணையர் பிரியங்கா முன்னிலையிலும் நடைபெற்றது.
கூட்டத்தில் உதவி ஆணையர்கள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களும் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் நிலவும் குறைகளை மனுவாக வழங்கினர்.
இதில், தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்கத்தின் சார்பில் செயலாளர் ரெங்கசாமி தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர்.
மனுவின் முக்கிய கோரிக்கை சங்கத்துக்கு சொந்தமான 3.5 சென்ட் இடத்தை, பாலகிருஷ்ணன் என்ற ஒருவர் போலியாக தன்னுடைய சொத்தாக பட்டா தயாரித்து, மாநகராட்சியில் தவறாக தீர்வை ரசீது பெற்றுள்ளார். அந்த போலியான தீர்வை ரசீதை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும்படி சங்கம் கோரிக்கை வைத்தது.
மனுவை பெற்றுக்கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, உரிய பரிசீலனை செய்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் நாயுடு மகாஜன சங்கம் மனு — போலி பட்டா விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக மேயர் உறுதி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி கிழக்கு மண்டலத்தில் மேயர் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம்!!
அடுத்த
தலித்-பழங்குடி, பெண்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்!!
இதையும் படிக்கலாம்
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026
உலக மக்கள் தொகை தினம்: தூத்துக்குடியில் மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் விஷுமகாஜன் தொடங்கி வைத்தார்!!
17 Jul 2026