தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல வாராந்திர குறைதீர்க்கும் கூட்டம் இன்று பழைய மாநகராட்சி வளாகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையிலும், ஆணையர் பிரியங்கா முன்னிலையிலும் நடைபெற்றது.
கூட்டத்தில் உதவி ஆணையர்கள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களும் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் நிலவும் குறைகளை மனுவாக வழங்கினர்.
இதில், தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்கத்தின் சார்பில் செயலாளர் ரெங்கசாமி தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர்.
மனுவின் முக்கிய கோரிக்கை சங்கத்துக்கு சொந்தமான 3.5 சென்ட் இடத்தை, பாலகிருஷ்ணன் என்ற ஒருவர் போலியாக தன்னுடைய சொத்தாக பட்டா தயாரித்து, மாநகராட்சியில் தவறாக தீர்வை ரசீது பெற்றுள்ளார். அந்த போலியான தீர்வை ரசீதை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும்படி சங்கம் கோரிக்கை வைத்தது.
மனுவை பெற்றுக்கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, உரிய பரிசீலனை செய்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் நாயுடு மகாஜன சங்கம் மனு — போலி பட்டா விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக மேயர் உறுதி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி கிழக்கு மண்டலத்தில் மேயர் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம்!!
அடுத்த
தலித்-பழங்குடி, பெண்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்!!
இதையும் படிக்கலாம்
சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை!!
01 Sep 2026
தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு: கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
01 Sep 2026
39 ஆண்டுகளாக தீராத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை! “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதல்வர் விஜய் வாக்குறுதி நிறைவேறுமா?
29 Aug 2026
சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்ற வேண்டும்!மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
29 Aug 2026