தமிழக 2025 - 2026 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் போது திருச்சியில் திறக்கப்பட இருக்கும் ரூ. 290 கோடி மதிப்புள்ள நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தார்.
நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று அறிவிப்பு செய்த முதல்வருக்கு நன்றி செலுத்தும் விதமாக தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகத்தின் மாவட்ட செயலாளர் அற்புதராஜ் தலைமையில் நிர்வாகிகள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவனை இன்று ( 05.04.2025) மாலை கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்து சமக சார்பில் முதல்வருக்கு எங்களது வாழ்த்துக்களையும், நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறி அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர்.
உடன் மாவட்ட அவைத் தலைவர் கண்டி வேல், மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் அந்தோணி பிச்சை, மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சகாய ராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், தொண்டர் அணி செயலாளர் முத்துச் செல்வம், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாநகர அவைத் தலைவர் மதியழகன், மாநகர செயலாளர் உதய சூரியன், நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ்குமார், நாடார் பேரவை மாவட்ட மகளிரணி தலைவி, சந்திரா மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி சமக மாவட்ட செயலாளர் அற்புதராஜ் தலைமையில் அமைச்சர் கீதா ஜீவனை சந்தித்து முதல்வருக்கு நன்றி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் புத்தொழில் களம் எம்.பி. தலைமையில் நடைபெற்றது!!
அடுத்த
தூத்துக்குடியில் இருந்து புதிய பேருந்து சேவையை அமைச்சர் கீதா ஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026
உலக மக்கள் தொகை தினம்: தூத்துக்குடியில் மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் விஷுமகாஜன் தொடங்கி வைத்தார்!!
17 Jul 2026