அதிமுக கழக பொதுச் செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி. பழனிச்சாமி ஆணைக்கிணங்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில் பெண்களை கொச்சைப்படுத்தி ஆபாசமாக பேசிய திமுக அமைச்சர் பொன்முடி உடனடியாக பதவி விலகக் கோரியும், அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காத விடியா திமுக அரசை கண்டித்தும், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் டூவிபுரம் பெல் ஸ்கூல் அருகில் இன்று மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் சின்னத்திரை, திருபாற்கடல் ஆறுமுக நயினார், சுதாகர், விக்னேஷ், விஜய குமார், நடராஜன், பிரபாகர், சேவியர், பெருமாள்சாமி, மற்றும் கழகத்தின் தெற்கு மாவட்ட அனைத்து பகுதி நிர்வாகிகள், மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.