தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி பேருந்து (பழைய பேருந்து) நிலையம் வளாகத்தில் இன்று (21.03.2025) காலை உப்பு சர்க்கரை கரைசலை (ORS) பொதுமக்களுக்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கி தொடங்கி வைத்தார்.
வெப்பத்தினால் ஏற்படும் உடல் சோர்வினை கட்டுப்படுத்தவும், வயிற்றுப்போக்கை விரைவில் குணப்படுத்தவும், இந்த உப்பு சர்க்கரை கரைசல் பெரிதும் பயன்படுகிறது. கடுமையான கோடை வெயிலிலிருந்து, வயிற்றுப்போக்கு, உடல் சோர்வு போன்ற நோய்களில் இருந்து விடுபட இந்த உப்பு சர்க்கரை கரைசலை பொதுமக்கள் பயண்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மண்டல தலைவர், பகுதி செயலாளர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி சுகாதார குழு தலைவர், முன்னாள் கவுன்சிலர், மாநகர் நல அலுவலர், மேயரின் உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் உப்பு சர்க்கரை கரைசல் - பொதுமக்களுக்கு வழங்கி மேயர் தொடங்கி வைத்தார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மோடி பிரைம் மினிஸ்டர் அல்ல; பிக்னிக் மினிஸ்டர்!!
அடுத்த
மாநகராட்சி 3 வது வார்டு பூங்காவில் கண்காணிப்பு கேமரா திறப்பு விழா!!
இதையும் படிக்கலாம்
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026
உலக மக்கள் தொகை தினம்: தூத்துக்குடியில் மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் விஷுமகாஜன் தொடங்கி வைத்தார்!!
17 Jul 2026