தூத்துக்குடி மாநகரம் திரேஸ்புரம் பகுதியில் திமுக சார்பில் முதல்வரின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
சிறப்புரை நிகழ்த்திய கொண்டு இருக்கும் வேளையில் அருகில் உள்ள பள்ளிவாசலில் இஸ்லாமிய சகோதரர்கள் நோன்பு விரதங்களை கடைபிடித்து நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தி தொழுகையில் ஈடுபட்டனர்.
அப்போது மேடையில் பேசி கொண்டு இருந்த அமைச்சர் தொழுகை பாடல் ஒலிபெருக்கியின் மூலம் கேட்ட உடனே தனது பேச்சை நிறுத்தி அமைதி காத்து தொழுகைக்கு உரிய மரியாதை அளித்து பின்பு தனது உரையை தொடங்கினார்.
சில நிமிடம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைதி காத்தது. அமைச்சரின் இந்த செயல் பொதுமக்களிடையே பேசும் பொருளானது. பின்னர் திரேஸ்புரம் பகுதி மக்களுக்கு தனது கரங்களால் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பு செய்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திரேஸ்புரம் பகுதி திமுக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் மாவட்ட கழக நிர்வாகிகள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், வட்ட செயலாளர்கள், மகளிரணி நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
பள்ளிவாசலில் தொழுகை பேச்சு நிறுத்தி அமைதி காத்த அமைச்சர் கீதா ஜீவன்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பாஜக பிரமுகர் காசிலிங்கம் தனது வீட்டில் கருப்பு கொடி ஏற்றி ஆர்பாட்டம்!!
அடுத்த
131 நபர்களுக்கு இரண்டாம் கட்டமாக கணினி பட்டா - அமைச்சர் வழங்கி தொடங்கி வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை!!
01 Sep 2026
தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு: கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
01 Sep 2026
39 ஆண்டுகளாக தீராத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை! “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதல்வர் விஜய் வாக்குறுதி நிறைவேறுமா?
29 Aug 2026
சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்ற வேண்டும்!மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
29 Aug 2026