தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் பெய்த கனமழையால் மழைநீர் தேங்கிய நிலையில், அதனை விரைந்து வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அதன் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதேபோன்று, கதிர்வேல் நகர் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டன. இப்பணிகள் முடிவடையும் போது, அந்தப் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீர் விரைவாக வெளியேறக்கூடிய நிலை உருவாகும் என அவர் தெரிவித்தார்.
மக்கள் சிரமங்களை தீர்க்க அனைத்து துறைகளும் இணைந்து பணியாற்றி வருவதாகவும், தொடர்ந்து கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேயர் கூறினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மழைநீர் நெருக்கடி தீர்வுக்கான பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கோவில்பட்டியில் சமூக நீதி பயணம்: “ஒடுக்கப்பட்டோரின் அரணாக முதல்வர் ஸ்டாலின்” – ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன்!!
அடுத்த
மாப்பிளையூரணியில் மழைநீர் தீர்க்கும் பணிகள் தீவிரம் – சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026
உலக மக்கள் தொகை தினம்: தூத்துக்குடியில் மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் விஷுமகாஜன் தொடங்கி வைத்தார்!!
17 Jul 2026