தூத்துக்குடி, நவம்பர் 28 தூத்துக்குடி மீளவிட்டான் ரோட்டில் இயங்கி வரும் டிலைட் பப்ளிக் பள்ளியின் ஒரு பிரிவாக செயல்படும் டிலைட் ரைபிள் அகாடமி, மாநில அளவிலான 2வது ஜிசி இன்டர் கிளப் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பான சாதனையைப் புரிந்து மாவட்டத்தின் உயரத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.
திண்டுக்கல்லில் 2025ம் ஆண்டு 15ம் தேதி நடைபெற்ற இந்த மாநில அளவுப் போட்டியில், டிலைட் பள்ளி முதல்வர், மாணவர்கள், பள்ளி செயலாளர் மற்றும் அகாடமி உறுப்பினர்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் பிரிவுகளில் பங்கேற்றனர்.
சாதனை படைத்த பதக்க வீரர்கள்
மெர்லின் பிரமிளா – தங்கப் பதக்கம்
சோபியா செல்வராணி – வெள்ளிப் பதக்கம்
பயிற்சியாளர் டோனிக் சத்யா – வெள்ளிப் பதக்கம்
மாணவி சத்யா – வெள்ளிப் பதக்கம்
ரக்ஷனா சாய்வி – வெண்கலப் பதக்கம்
புதியதாக துவங்கப்பட்ட டிலைட் ரைபிள் அகாடமிக்கு இது மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்துள்ளது. மாணவர்களின் சாதனையையும், பயிற்சியாளர்களின் அர்பணிப்பையும் பாராட்டி, டிலைட் பப்ளிக் பள்ளி தலைவர் ஜெயசீலன், தாளாளர் பிரபாகரன் ஜான் ஜெயக்குமார், பயிற்சியாளர் அண்டோனி மால்லன் நட்டர்ஜி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
டிலைட் ரைபிள் அகாடமியின் இச்சிறப்பு சாதனை, மாவட்டத்தில் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டின் வளர்ச்சிக்கு புதிய ஊக்கத்தை வழங்குகிறது.
தூத்துக்குடி
டிலைட் ரைபிள் அகாடமிக்கு பொற்காலம்: மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வெற்றி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மீ.கா தெருவில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் அதிமுக தீவிர கண்காணிப்பு!!
அடுத்த
“கனமழையைக் கண் நேரில் கட்டுப்படுத்தும் கமாண்டர் – தூத்துக்குடி மேயர் ஜெகன் ஆய்வில் தீவிரம்!”
இதையும் படிக்கலாம்
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026
உலக மக்கள் தொகை தினம்: தூத்துக்குடியில் மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் விஷுமகாஜன் தொடங்கி வைத்தார்!!
17 Jul 2026