தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் போக்குவரத்து தலைமை காவலராக பணிபுரிந்து வரும் சங்கரன் இன்று காலை தூத்துக்குடி மார்க்கெட் எதிரே உள்ள அண்ணா சிலை அருகில் பணி செய்து கொண்டு இருந்தார்.
மார்க்கெட் எதிரே அண்ணா சிலை பின்புறம் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள தார் ரோடு சேதமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
அந்த சாலையை பள்ளி மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடப்பதற்கு மிகுந்த சிரமத்திற்குள்ளாவதை கண்ட போக்குவரத்து தலைமை காவலர் சங்கரன் சிறிதும் யோசிக்காமல் பைப் லைன் இணைப்பதற்காக அருகில் தோண்டப்பட்டு மண் குவிக்கபட்டுள்ள இடத்தில் இருந்து மேடு பள்ளம் உள்ள சாலையை சீர் செய்வதற்கு மண்ணை மண்வெட்டி மூலம் தன் கைகளால் அள்ளி சாலையை சீரமைத்து பள்ளி மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையை கடப்பதற்கு பெரும் உதவி செய்திருக்கிறார்.
இதை பார்த்த பொதுமக்கள் போக்குவரத்து தலைமை காவலருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர். இதை ஒரு நபர் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
தூத்துக்குடி
சோசியல் மீடியாவை கலக்கும் போக்குவரத்து தலைமை காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாநகராட்சி 3 வது வார்டு பூங்காவில் கண்காணிப்பு கேமரா திறப்பு விழா!!
அடுத்த
போலி பத்திரம் பதிவு செய்து இடத்தை அபகரிக்க முயற்சி - வழக்கறிஞர் பரபரப்பு புகார்!!
இதையும் படிக்கலாம்
சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை!!
01 Sep 2026
தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு: கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
01 Sep 2026
39 ஆண்டுகளாக தீராத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை! “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதல்வர் விஜய் வாக்குறுதி நிறைவேறுமா?
29 Aug 2026
சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்ற வேண்டும்!மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
29 Aug 2026