தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் போக்குவரத்து தலைமை காவலராக பணிபுரிந்து வரும் சங்கரன் இன்று காலை தூத்துக்குடி மார்க்கெட் எதிரே உள்ள அண்ணா சிலை அருகில் பணி செய்து கொண்டு இருந்தார்.
மார்க்கெட் எதிரே அண்ணா சிலை பின்புறம் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள தார் ரோடு சேதமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
அந்த சாலையை பள்ளி மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடப்பதற்கு மிகுந்த சிரமத்திற்குள்ளாவதை கண்ட போக்குவரத்து தலைமை காவலர் சங்கரன் சிறிதும் யோசிக்காமல் பைப் லைன் இணைப்பதற்காக அருகில் தோண்டப்பட்டு மண் குவிக்கபட்டுள்ள இடத்தில் இருந்து மேடு பள்ளம் உள்ள சாலையை சீர் செய்வதற்கு மண்ணை மண்வெட்டி மூலம் தன் கைகளால் அள்ளி சாலையை சீரமைத்து பள்ளி மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையை கடப்பதற்கு பெரும் உதவி செய்திருக்கிறார்.
இதை பார்த்த பொதுமக்கள் போக்குவரத்து தலைமை காவலருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர். இதை ஒரு நபர் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
தூத்துக்குடி
சோசியல் மீடியாவை கலக்கும் போக்குவரத்து தலைமை காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாநகராட்சி 3 வது வார்டு பூங்காவில் கண்காணிப்பு கேமரா திறப்பு விழா!!
அடுத்த
போலி பத்திரம் பதிவு செய்து இடத்தை அபகரிக்க முயற்சி - வழக்கறிஞர் பரபரப்பு புகார்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026