தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் நேற்று புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு விழா நடைபெற்றது. பெருமாள் குருவாயூரப்பன் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
இந்நிகழ்ச்சியின் பகுதியாக தூத்துக்குடி பங்களா தெருவைச் சேர்ந்த சுமார் 30 குழந்தைகள் ராதை வேடமணிந்து முக்கிய சாலைகள் வழியாக கோயிலை அடைந்தனர். கோயில் வளாகத்தில் குழந்தைகள் பல்வேறு பாடல்களுக்கு அழகிய கோலாட்ட நடனம் ஆடி பார்வையாளர்களை கவர்ந்தனர்.
நிகழ்ச்சியை தினமலர் தினேஷ் துவக்கி வைத்து, பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி, சிவன் கோவில் முன்னாள் அறங்காவலர் ஆறுமுகம், அதிமுக வக்கீல் அணி மாவட்ட இணைச் செயலாளர் சரவணப்பெருமாள், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் செந்தில்குமார், கந்தசாமி, வைகுண்டபதி பெருமாள் கோவில் தலைமை அர்ச்சகர் வைகுண்ட ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி குழந்தைகள் ராதை வேடமணிந்து கோலாட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கரூரில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்திய இபிஎஸ் – ‘‘விலைமதிக்க முடியாத உயிர்களை இழந்துள்ளோம்… குற்றம் சொல்ல விருப்பமில்லை’’
அடுத்த
தூத்துக்குடியில் காமாட்க்ஷி பாலி கிளினிக் புதிய மருத்துவமனை திறப்பு!!
இதையும் படிக்கலாம்
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026
உலக மக்கள் தொகை தினம்: தூத்துக்குடியில் மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் விஷுமகாஜன் தொடங்கி வைத்தார்!!
17 Jul 2026