தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் நேற்று புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு விழா நடைபெற்றது. பெருமாள் குருவாயூரப்பன் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
இந்நிகழ்ச்சியின் பகுதியாக தூத்துக்குடி பங்களா தெருவைச் சேர்ந்த சுமார் 30 குழந்தைகள் ராதை வேடமணிந்து முக்கிய சாலைகள் வழியாக கோயிலை அடைந்தனர். கோயில் வளாகத்தில் குழந்தைகள் பல்வேறு பாடல்களுக்கு அழகிய கோலாட்ட நடனம் ஆடி பார்வையாளர்களை கவர்ந்தனர்.
நிகழ்ச்சியை தினமலர் தினேஷ் துவக்கி வைத்து, பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி, சிவன் கோவில் முன்னாள் அறங்காவலர் ஆறுமுகம், அதிமுக வக்கீல் அணி மாவட்ட இணைச் செயலாளர் சரவணப்பெருமாள், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் செந்தில்குமார், கந்தசாமி, வைகுண்டபதி பெருமாள் கோவில் தலைமை அர்ச்சகர் வைகுண்ட ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி குழந்தைகள் ராதை வேடமணிந்து கோலாட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கரூரில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்திய இபிஎஸ் – ‘‘விலைமதிக்க முடியாத உயிர்களை இழந்துள்ளோம்… குற்றம் சொல்ல விருப்பமில்லை’’
அடுத்த
தூத்துக்குடியில் காமாட்க்ஷி பாலி கிளினிக் புதிய மருத்துவமனை திறப்பு!!
இதையும் படிக்கலாம்
சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை!!
01 Sep 2026
தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு: கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
01 Sep 2026
39 ஆண்டுகளாக தீராத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை! “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதல்வர் விஜய் வாக்குறுதி நிறைவேறுமா?
29 Aug 2026
சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்ற வேண்டும்!மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
29 Aug 2026