தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கான “மாபெரும் பூத் கமிட்டி மாநாடு” வருகிற நவம்பர் 2ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.00 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் வ.உ.சி திடலில் (ஸ்டேட் பேங்க் அருகில்) பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இம்மாநாடு, பாஜக அமைப்பின் அடித்தளம் எனக் கொள்ளப்படும் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துதல், வரவிருக்கும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை முன்னெச்சரிக்கையுடன் தயார்படுத்துதல், மேலும் வெற்றிக்கான வியூகங்களை வகுத்தல் ஆகிய நோக்கங்களுடன் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான திரு. பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள், மற்றும் பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளருமான திரு. கேசவவிநாயகம் ஜி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.
மாநில அமைப்பு பொதுச்செயலாளர் திரு. கேசவவிநாயகம் ஜி அவர்கள், “வரவிருக்கும் தேர்தல்களில் ஒவ்வொரு கிளைகளையும் (பூத்துகளை) வெற்றி பெற வைக்க வேண்டும்” என்ற இலக்கை வலியுறுத்தி, அதனை அடைவதற்கான விரிவான செயல்திட்டங்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்க உள்ளார்.
இம்மாநாட்டில் மாநில, மாவட்ட, மண்டல, கிளை நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் திரு. சித்ராங்கதன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
தூத்துக்குடி
ஸ்ரீவைகுண்டத்தில் நவம்பர் 2ம் தேதி பாஜக மாபெரும் பூத் கமிட்டி மாநாடு!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனை — கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் முயற்சியில் விரைவில் வழங்கப்படும் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
அடுத்த
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி – 103 ஆண்டுகளின் இலாபப் பயணத்தில் புதிய மைல்கல்: இரண்டாம் காலாண்டில் சாதனை நிகர லாபம்!!
இதையும் படிக்கலாம்
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026
உலக மக்கள் தொகை தினம்: தூத்துக்குடியில் மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் விஷுமகாஜன் தொடங்கி வைத்தார்!!
17 Jul 2026