தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு கவுன்சிலரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளருமான ரெங்கசாமி இல்ல பூப்புனித நீராட்டு விழாவில்,

மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு செல்வி. சாய் வர்ஷிதா வை வாழ்த்தினார். அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி ரெங்கசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தெற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள், மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.