தூத்துக்குடியில் (03.04.2025) அன்று காலை அத்திமரப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜோதிமணி கதை வசனத்தில், பிராட்வே சுந்தரின் திரைக்கதை, இயக்கம், இசையில், மெர்சி ரோஸ்லின் ஜோதிமணி தயாரிப்பில் உயிர்மூச்சு திரைப்படம் தூத்துக்குடி கிளியோபாட்ரா திரையரங்கில் விவசாயி ஜோதிமணி, மெர்சி ரோஸ்லின் ஜோதிமணி மற்றும் பிராட்வே சுந்தர் திருக்கரங்களால் வெளியிடப்பட்டது.

இந்த படத்தில் தீபா சங்கர்,  விஷ்ணு, ராஜ்கபூர், ஸ்டண்ட் மதுர, சிவசு, ராஜேந்திர பூபதி, தாமரை செல்வன், வக்கீல் செங்குட்டுவன், ராஜ் மாசாணம், சீலன்ஸ்ருதி, ஐ. செல்வக்குமார், ஜெரோம், காமெடி வேடத்தில் சுமங்கலி சதீஷ், சேலம் சரண், வருண், உட்பட பலர் நடித்துள்ளனர்.

உயிர் மூச்சு திரைப்படம் இன்றுடன் 30 நாட்களை கடந்து வெற்றி நடை போட்டு கொண்டு இருக்கிறது. குடிப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து இயக்கிய படம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்த படம் முழுக்க முழுக்க தூத்துக்குடியை மையமாக கொண்டு இயக்கியதால் நம் மக்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்கம் வந்து ஆர்வத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

உயிர் மூச்சு திரைபடத்தை பார்த்து அதில் வரும் காட்சிகளில் பிரம்மித்து இதுபோன்று பல நல்ல கதைகளை இயக்கிய திரைபட குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு மட்டுமல்லாது, ஸ்ரீ செல்லம் சுடிதார் ரெடிமேட் உரிமையாளர் உயிர் மூச்சு திரைபடத்தை திரையரங்கில் பார்த்து விட்டு பின்னர் என் கடைக்கு நேரடியாக வந்து உயிர்மூச்சு திரைபடத்தின் 6 டிக்கெட்டை கொடுப்பவர்களுக்கு 1 சுடிதார் இலவசம் என்று சலுகையை அறிவித்து இருக்கிறார்.

உயிர் மூச்சு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் தீபா சங்கர், மற்றும் காமெடி நடிகனாக சுமங்கலி சதீஷ், சேலம் சரண், வருண், ஆகியோர் நடிப்பு காண்போரை பிரம்மிப்பூட்டும் அளவிற்கு உள்ளது.

மொத்தத்தில் உயிர் மூச்சு திரைப்படம் வெற்றி படங்களில் தங்களுக்கான ஒரு இடத்தை தக்கவைத்து கொண்டது என்றே கூறலாம்.