தூத்துக்குடி, நவம்பர் 10:
இன்று (10.11.2025) திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில், தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையம் அருகில் உள்ள பாபா சாகிப் அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் முழு உருவ சிலைக்கு, புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்டச் செயலாளர் போராளி அண்ணன் திரு மா.மாரிச்செல்வம் அவர்களின் 55வது பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், தமிழர் முன்னேற்றக் கழகம் மாநிலத் தலைவர் திரு இ.அர்ஜுனன் அவர்கள் கலந்து கொண்டு, மாவட்டச் செயலாளர் திரு மா.மாரிச்செல்வம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
நிகழ்வில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் திரு ஆ.இந்திரன், திரு மு.அந்தோணிசாமி, மகளிர் அணி செயலாளர் திருமதி எஸ்.சிறுலட்சுமி, சிறுபான்மை பிரிவு செயலாளர் திரு எம்.சந்தியாகு, APLF செயலாளர் திரு எஸ்.கணேசன், பொறியாளர் துறை செயலாளர் திரு டி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி
புரட்சி பாரதம் கட்சி மாவட்டச் செயலாளர் மா.மாரிச்செல்வம் 55வது பிறந்தநாள் – டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“எழுத்தறிவும், பொதுஅறிவும் தான் எதிர்காலத்தின் பூமிகை” — நூலக பணிகளை பார்வையிட்ட மேயர் தகவல்!!
அடுத்த
புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல கிராமங்களில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை G.V.மார்கண்டேயன் துவக்கி வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
"நீட் தேர்வை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கும்; தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை உருவாக்குவோம்" – தூத்துக்குடியில் அகில இந்திய செயலாளர் டாக்டர் செல்லக்குமார் பேட்டி!!
20 Jul 2026
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் மாபெரும் மினி மாரத்தான்: 1,887 பேர் உற்சாக பங்கேற்பு; 124 பேருக்கு பரிசுகள் வழங்கல்!!
20 Jul 2026
"ராஜினாமா செய்து தவெகவில் சேரச் சொன்னார்கள்" – ரூரல் டிஎஸ்பி மீது அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!!
20 Jul 2026
“ஒடுக்க ஒடுக்க நீர்க்குமிழி போல மேலே வருவோம்” – மார்க்கண்டேயன் எம்எல்ஏ கைது விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கடும் கண்டனம்!!
20 Jul 2026