ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கொல்லங்கிணறு கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் 9.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலைக் கடையை சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், சித்தார்த்தன், வட்டார வழங்கல் அலுவலர் ஆரோக்கியசாமி, உதவி பொறியாளர் பால நமச்சிவாயம், பணி மேற்பார்வையாளர்கள் சங்கர், பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் முருகலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் சுடலை கண்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லதா முருகன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார், ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன், கிளை செயலாளர் குமார், மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.