தூத்துக்குடி மாநகராட்சியின் நூலக வரி நிதியிலிருந்து ரூபாய் 9.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நூலக கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா தனசேகர் நகர் பகுதியில் இன்று மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கவுன்சிலர்கள் கீதா முருகேசன், ரெங்கசாமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.