தூத்துக்குடி கட்டபொம்மன் நகர் கருணாகரன், காளீஸ்வரி தம்பதியின் இளைய மகன் பொன் பாலமுருகன் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய வந்த நிலையில் நேற்றைய தினம் பத்தாம் வகுப்பிற்கான தேர்வு முடிவு வெளியானது.

இதில் பொன் பாலமுருகன் 500 மதிப்பெண்ணுக்கு 493 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்து பள்ளிக்கும் தூத்துக்குடி கட்டபொம்மன் நகருக்கு பெருமை சேர்த்துள்ளார்.

பள்ளியில் முதலிடம் பிடித்த பொன் பாலமுருகனை வீரசக்க தேவி ஆலய குழு தலைவர் முருகபூபதி பாஞ்சாலங்குறிச்சிக்கு நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி மரியாதை செய்து வீரசக்க தேவி ஆலய குழு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் முழுவுருவ சிலையை பரிசாக வழங்கினார்.

இதோடு நில்லாமல் தொடர்ந்து பல சாதனைகளை புரிய வேண்டும். நம் சமுதாயத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மொட்டையசாமி (மேஸ்திரி) முத்தையாபுரம் கண்ணன், வீரசக்க தேவி ஆலய குழு செயலாளர் செந்தில்குமார், பாஞ்சாலங்குறிச்சி செண்பகராஜ், முத்துக்குமார், ஆகியோர் உடன் இருந்தனர்.