தூத்துக்குடி மாவட்ட முன்னாள் திமுக செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் நகர்மன்ற தலைவர், என். பெரியசாமியின் 8 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, இன்று (26.05.2025) காலை தூத்துக்குடி மாநகர 48 வது வார்டு சார்பில் திருச்செந்தூர் ரோடு அன்னம்மாள் மகளிர் கல்லூரி அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள என். பெரியசாமியின் திருவுருவ படத்திற்கு, மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் வழிகாட்டுதலின்படி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆலோசனையின்படி 48 வது வட்ட செயலாளர் நவநீதன், கவுன்சிலர் ராஜேந்திரன் முன்னிலையில், பிரையன்ட் நகர் பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் சி.என். அண்ணாதுரை, பிரையன்ட் நகர் பகுதி தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகியும் வட்ட பிரதிநிதியுமான முத்துக்குமார், பிரதிநிதி ஜேசு பாலன், துணை செயலாளர் ரமேஷ், முக்கிய நிர்வாகிகள் ரமேஷ், பாக முகவர்கள் செல்வேந்திரன், லோகநாதன், பகுதி இளைஞரணி பிரதீப், விளையாட்டு மேம்பாட்டு அணி ரகுபதி, நெசவாளர் அணி வெள்ளை பெருமாள் மற்றும் கணேஷ், பாலமுருகன், சாத்தாவு, செல்வம் உட்பட திமுகவினர் பலர் கலந்து கொண்டு என். பெரியசாமியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து நினைவு அஞ்சலி செலுத்தினர்.