தூத்துக்குடி மாவட்ட முன்னாள் எம்.எல்.ஏ, முன்னாள் நகர்மன்ற தலைவர், முன்னாள் திமுக மாவட்ட கழக செயலாளர் என். பெரியசாமியின் 8 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி போல் பேட்டையில் உள்ள நினைவிடத்தில் அமைந்துள்ள மார்பளவு சிலைக்கு 50 வது வார்டு கவுன்சிலர் சரவணகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் சிங்கராஜ், வட்ட பிரதிநிதி எம். வேல்மணி, செல்வம், ராஜேந்திரன், ராஜேஷ் லெட்சுமணன், வட்ட துணை செயலாளர் ரீலக்ஸ் ஜெயமேரி, மாநகர தொண்டர் அணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன், பிரையன்ட் நகர் பகுதி ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் செல்வக் குமார், இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுஜிதா சரவணன், பகுதி விளையாட்டு மேம்பாட்டுத்துறை துணை அமைப்பாளர் என். சீனிவாச குமார், பகுதி சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஜான் ஸ்டீபன், மற்றும் கழக நிர்வாகிகள் 50 வது வார்டு கழக செயல்வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி புகழ் அஞ்சலி செலுத்தினர்.