தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் நகர காங்கிரஸ் மற்றும் வட்டார காங்கிரஸ் சார்பில் நேற்று முன்தினம் புதுக்குடியில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.

பொதுமக்களின் தாகம் தணிக்க அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருமான  அமிர்தராஜ் திறந்து வைத்து மக்களுக்கு பழங்கள், மற்றும் குளிர்பானங்கள் வழங்கினார்.

நிகழ்வில் நகர காங்கிரஸ் தலைவர் கருப்பசாமி, வட்டார காங்கிரஸ் தலைவர் நல்லக்கண்ணு, மாவட்ட பொதுச் செயலாளர் சீனிராஜேந்திரன், நிலமுடையான், வழக்கறிஞர் பாலு, வட்டாரத் தலைவர்கள் கோதண்டராமன், ஜெபராஜ், மகளிரணி மாரியம்மாள், பஞ்சவர்ணம், நளராஜபுரம் சரத்பாலன், டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பிரேம்நாத், ஐஎன்டியுசி சந்திரன், நகர செயலாளர் மதிசேகரன், நகர சேவாதள தலைவர் சித்திரை எம்.எல்.ஏ. உதவியாளர் சந்திரபோஸ் உட்பட பலர் உடன் இருந்தனர்.