இந்து நாடார் உறவின் முறைக்கு பார்த்தியப்பட்ட பிரையன்ட் நகர் அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோவில் கொடை விழாவானது (07.08.2025) அன்று தொடங்கி (13.08.2025) வரை ஏழு நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. நேற்று இரவு (07.08.2025) வியாழக்கிழமை முதல்நாள் நிகழ்ச்சியாக எஸ்.ஆர். சந்திரன் வழங்கும் ஸ்டார் நைட் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

கச்சேரிக்கான ஏற்பாடுகளை பிரையன்ட் நகர் ஐக்கிய வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகள் பிக்.அப். தனபாலன் நாடார், சுகன்யா. செந்தில்குமார் நாடார், பொன் சுகுமார் நாடார், பால்ச்சாமி நாடார், வெற்றிராஜன் நாடார், பொன் கார்த்திகேயன் நாடார், வழக்கறிஞர் ரூபராஜா நாடார், ஜெயச்சந்திரன் பிரபாகர் நாடார், ஞானசேகர் நாடார், சுயம்புலிங்கம் நாடார், ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு இன்னிசைக் கச்சேரியை கண்டு ரசித்தனர்.