தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் சமூக சீர்திருத்த அறிஞர் பெரியார் ஈ.வே. இராமசாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி மாநகராட்சி வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் சமூகத்தில் சாதி, மத வேறுபாடுகள் நீங்கி சமத்துவம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும், அனைவருக்கும் கல்வி, வேலை, சம உரிமை மற்றும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.