புரட்சி பாரதம் கட்சி தேசிய தலைவர் மற்றும் K.V. குப்பம் சட்டமன்ற உறுப்பினர் இளம் புரட்சியாளர் அண்ணன் டாக்டர் பூவை. எம். ஜெகன் மூர்த்தியார் அவர்களின் ஆணையின்படி, புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்டம் சார்பில் சமூக நீதி காவலர் தந்தை பெரியார் அவர்களின் 147-வது பிறந்த நாள் விழா மரியாதையுடன் முன்னெடுக்கப்பட்டது.

இவ்விழாவில், தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட துணைச் செயலாளர் திரு ஆ. இந்திரன், மாவட்ட செய்தி தொடர்பாளர் திரு மு. மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.