ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கவர்னகிரி ஊராட்சி கவர்னகிரி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் கட்டிடத்தினை சட்டமன்ற உறுப்பினர் M.C. சண்முகையா திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து அங்குள்ள ரேசன் கடைக்கு சென்று ரேசன் பொருட்களை பார்வையிட்டார். சமுதாய நலக்கூடம், ரேசன் கடை கட்டிடம், பிள்ளையார் கோவில் தெருவில் வாறுகால் வசதி, கிழக்கு தெருவில் உறிஞ்சு குழாய் ஆகிய கோரிக்கைகளை பொதுமக்கள் வைத்தனர். எம்.எல்.ஏ வும் கோரிக்கை சம்பந்தமாக நேரில் சென்று பார்வையிட்ட பின் ஒவ்வொன்றாக செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் அறிவழகன் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிக்குமார் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா ஒன்றிய பொறியாளர் பத்மாவதி மேற்பார்வையாளர் செல்வி. ஶ்ரீநிதி ஊராட்சி செயலர் ராமர் வருவாய் ஆய்வாளர் ஶ்ரீரங்கபெருமாள் கிராம நிர்வாக அலுவலர் வீரமாமுனிவர் முன்னாள் யூனியன் கவுன்சிலர் கனகரத்தினம் சுகுமார் தங்கவேல் சக்திமுருகன் சண்முகையா சேசையா அங்கன்வாடி குழந்தைகள் பெற்றோர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.