ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மற்றும் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதியபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், முத்தம்மாள் காலனி பூங்கா மற்றும் அங்கன்வாடி, முத்தம்மாள் காலனி துடிசியா, டாக்டர் செல்வராஜ் மருத்துவமனை, ஆதிபராசக்தி நகர், ராம் நகர், வெங்கடேஸ்வரா அழகர் கடை, KTC நகர் ஆரம்ப சுகாதார நிலையம், ஹௌசிங் போர்டு மற்றும் ஓம் சாந்தி நகர் உள்ளிட்ட மழைநீர் தேங்கிய பகுதிகளில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா நேரில் சென்று பார்வையிட்டார்.
மழைநீரை வெளியேற்றுவதற்காக மின் மோட்டார் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகளை ஆய்வு செய்த அவர், மேலும் மின் மோட்டார் தேவைப்படும் இடங்களில் உடனடியாக பொருத்தும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். மின் மோட்டார்கள் தடையின்றி தொடர்ந்து இயங்கும்வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நேரம் மாநகராட்சி உதவி பொறியாளர் ராஜேஷ்கண்ணன், பகுதி கழக செயலாளர் சிவகுமார், மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி, வட்ட செயலாளர் தெய்வேந்திரன், மாவட்ட பிரதிநிதி பூவேஷ்நாதன், அவைத்தலைவர் ராஜசேகர், பொறியாளர் அணி தர்மர், இளைஞரணி பத்மநாபன், வேல்குமார், மகளீரணி பௌஷியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
மழை பாதித்த மக்களுக்கு நிம்மதி – அதிவேக நடவடிக்கையில் எம்.சி. சண்முகையா எம்எல்ஏ!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழைநீர் மக்களைக் சிரமப்படுத்தாதபடி, அமைச்சர் நேரடியாக களத்தில்!
அடுத்த
மழைநீரை விரைவாக வெளியேற்ற அதிரடியாக களத்தில் இறங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி – எட்டையாபுரம் ஹவுசிங் போர்டு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026