வடகிழக்கு பருவமழை காரணமாக தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் எவ்வாறு முன்னேறி வருகின்றன என்பதை நேரடியாக பார்வையிட தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

அவருடன் பகுதி கழக செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், தொமுச மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி ஆகியோர் இணைந்து ஆய்வில் பங்கேற்றனர்.

மழைநீர் வெளியேற்றும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வரும் நிலையில், மேயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, வேகமாகவும் முழுமையாகவும் நீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட எட்டையாபுரம் ஹவுசிங் போர்டு, டி மார்ட் எதிர்புறம், ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெளியேற்றம் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் அச்சமின்றி இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.