தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் எஸ். பிரியங்கா, ஐஏஎஸ் அவர்களை இன்று (22.09.2025) திங்கட்கிழமை காலை புரட்சி பாரதம் கட்சி மாநகர் மாவட்டத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் மா. மாரிச் செல்வம் அவர்கள் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இதன்போது, முத்தையாபுரம் பகுதி பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மனு வழங்கப்பட்டது. குறிப்பாக,

முத்தையாபுரம் புல்க் ஜங்ஷனிலிருந்து சூசை நகர் வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்,

முத்தையாபுரம் பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் செயல்படும் தடை செய்யப்பட்ட பன்றி இறைச்சி கடைகளை அகற்றுதல்,

ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி மக்களை நோய்களிலிருந்து மற்றும் விபத்துக்களிலிருந்து காப்பாற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செய்தித் தொடர்பாளர் மு. மணிகண்டன் உடனிருந்தார்.