தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட கிருபை நகர் பகுதியில் அமைந்துள்ள நுண் உர செயலாக்க மையத்தினை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் கழக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.