ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) சார்பில் போட்டியிடுவதற்காக தூத்துக்குடி வடக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளரும், கருங்குளம் முன்னாள் சேர்மனுமான டாக்டர் எஸ். எம். ஏ. கோசல்ராம் ராஜா இன்று அதிமுக தலைமைக்கழகத்தில் தனது விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், கடம்பூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., அண்ணா தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலையில், அதிமுக அமைப்பு செயலாளர் கோகுல் இந்திராவிடம் விருப்ப மனு வழங்கப்பட்டது.
கட்சியின் கொள்கைகள் மற்றும் பொதுச் செயலாளர் வழிகாட்டுதலின்படி, ஓட்டப்பிடாரம் தொகுதி மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றும் நோக்கில் இந்த விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டதாக டாக்டர் கோசல்ராம் ராஜா தெரிவித்தார்.
இந்த நிகழ்வு அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியதுடன், ஓட்டப்பிடாரம் தொகுதியில் அரசியல் சூழலில் புதிய எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.
தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி – அதிமுக சார்பில் போட்டியிட டாக்டர் கோசல்ராம் ராஜா விருப்ப மனு தாக்கல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"சாக்தஸ்ரீ" சற்குரு ஶ்ரீனிவாச சித்தர் தலைமையில் தூத்துக்குடி பிரத்தியங்கிரா பீடத்தில் ஆஞ்சநேய ஜெயந்தி மற்றும் பிரத்தியங்கிராதேவி மகா அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது!!
அடுத்த
தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் விருப்பமனு தாக்கல்!!
இதையும் படிக்கலாம்
ஏடிஎஸ்பி திபு மீது தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எஸ்.பி. அபிஷேக் குப்தாவிடம் புகார் – 'இனி இதுபோல் நடக்காது' என உறுதி!!
21 Jul 2026
10 வயது சிறுமிக்கு நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!!
21 Jul 2026
39 ஆண்டுகளாக காத்திருக்கும் கனவு... தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கையை முதல்வர் விஜய் நிறைவேற்றுவாரா?
21 Jul 2026
தூத்துக்குடி இ.எஸ்.ஐ பயனாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வாஸன் கண் மருத்துவமனையில் இனி இலவச கண் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை வசதி!!
21 Jul 2026