புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி முன்னாள் மாவட்ட தலைவரும், முத்தையாபுரம் சுந்தர் நகர் பகுதி குடியிருப்பில் வசித்து வரும் சின்னப்பாராஜாவின் மகனுமான எட்வின் ஜோசப் முத்தையாபுரம் பகுதியில் வைத்து இன்று இரவு தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் தலைமையில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட பொறியாளர் துறை செயலாளர் ஏ.பி.எல்.எப். த. மகேந்திரன் தூத்துக்குடி மாநகர் மாவட்ட அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி இணைச் செயலாளர் எஸ். கணேசன் ஆகியோர் முன்னிலையில் தன்னை மீண்டும் தாய் கட்சியான புரட்சி பாரதம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

மீண்டும் தன்னை தாய் கழகமான புரட்சி பாரதம் கட்சியில் இணைந்த (ஐக்கியம்) முன்னாள் மாவட்ட தலைவருக்கு மாநகர மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.