ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட புதியம்புத்தூர் பாகம் எண் 50, 51, 52, 53, 54, 55 மற்றும் 56  வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்களுக்கு மண் மொழி மானம் காத்திட "ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கைக்காண ஆலோசனைக் கூட்டம் புதியம்புத்தூர் நகர கழக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான எம் சி. சண்முகையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் மற்றும் பாக நிலை முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சின்னதுரை பாண்டியன், மேற்கு ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் சிவன்,
மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முத்துக்குமார், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர், ஞானதுரை மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் தங்கவேல்சாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், மாணவரணி தங்கதுரைபாண்டியன், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் ஜெயா, கிளைச் செயலாளர்கள் சற்குணம் பாண்டியன், பூவலிங்கம் மற்றும் டிஜிட்டல் முகவர்கள் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.