தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து இன்று நடைபெற்ற முகாமினை தொடங்கி வைத்து பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு உடனடியாக தீர்வுகள் காணப்பட்டவர்களுக்கு அதற்கான ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.

மாநகராட்சி துணை ஆணையர் சரவணகுமார் பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார் மாமன்ற உறுப்பினர்கள் ரெக்ஸ்லின் பேபி ஏஞ்சலின் மகேஸ்வரி தனலட்சுமி ராமு அம்மாள் உட்பட பொதுமக்கள் பலர் முகாமில் கலந்து கொண்டனர்.