தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோடை காலத்தை முன்னிட்டும் சீரான குடிநீர் வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும்,

அதன் ஒரு பகுதியாக அழகேசபுரம் பகுதியிலுள்ள சுந்தரமபுரத்திற்கு குடிநீர் முறையாக வரவில்லை என்று அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையிணைத் தொடர்ந்து மாற்று வழியில் அந்தப் பகுதிக்கு குடிநீர் வழங்குமாறும், இதற்கான பணிகள் வரும் நாட்களில் ஆரம்பமாகும் என்றும் விரைந்து பணிகளை முடிக்குமாறும் அதிகாரிகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் மாமன்ற உறுப்பினர் ஜான்சிராணி ஆகியோர் உடன் இருந்தனர்.