தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட போல்பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி மழைக்காலத்தை முன்னிட்டு நகரின் வடிகால் அமைப்புகளை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி போல்பேட்டை பகுதியில் நடைபெற்ற தூர்வாரும் பணிகள் குறித்து மேயர் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கினார்.

மழைக்காலத்தில் பொதுமக்கள் சிரமப்படாதவாறு அனைத்து வடிகால் வழித்தடங்களும் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு அவர் பணித்தார்.

இந்த ஆய்வில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரனும் கலந்து கொண்டார்.