தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட குரூஸ்புரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஜடா முனீஸ்வரர் திருக்கோயிலின் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் மக்கள் நீதி மையத்தின் மாவட்ட செயலாளர் ஜவஹர், வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், கழக நிர்வாகி வேலுசாமி, கோயில் இளைஞர் அணியினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பக்தர்களின் பசியாற அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது.