தூத்துக்குடியில் முன்னாள் எம்.எல்.ஏவும், திமுக மாவட்ட செயலாளருமான என். பெரியசாமியின் 8 ம் ஆண்டு நினைவு தினம் இன்று (26.05.2025) அனுசரிக்கப்படுகிறது.

வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் கீதா ஜீவன், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் ஆலோசனையின்படி 50 வது வட்டக் கழக திமுக சார்பில் கழக அவைத் தலைவர் சிவானைந்தபெருமாள் தலைமையில், கவுன்சிலர் சரவணகுமார் முன்னிலையில் கணேசன் காலனி 1 வது தெரு அந்தோணியார் கெபி அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள என். பெரியசாமியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் சிங்கராஜ், வட்ட பிரதிநிதி எம். வேல்மணி, செல்வம், ராஜேந்திரன், ராஜேஷ் லெட்சுமணன், வட்ட துணை செயலாளர் ரீலக்ஸ் ஜெயமேரி, மாநகர தொண்டர் அணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன், பிரையன்ட் நகர் பகுதி ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் செல்வக் குமார், இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுஜிதா சரவணன், பகுதி விளையாட்டு மேம்பாட்டுத்துறை துணை அமைப்பாளர் என். சீனிவாச குமார், பகுதி சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஜான் ஸ்டீபன், மற்றும் கழக நிர்வாகிகள் 50 வது வார்டு கழக செயல்வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி புகழ் அஞ்சலி செலுத்தினர்.