தூத்துக்குடியில் சமூகநீதியின் வீரரும் தலித் உரிமைகளுக்காக போராடிய வீரநாயகனுமான இம்மானுவேல் சேகரனின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பான நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இதில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் அவர்கள், இம்மானுவேல் சேகரனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், அவைத்தலைவர் ஏசுதாஸ், துணைச் செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூரி தங்கம், இராஜா, மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

அத்துடன், மாவட்ட அணி நிர்வாகிகள் அபிராமிநாதன், கவிதாதேவி, அந்தோணி ஸ்டாலின், குபேர் இளம்பரிதி, அந்தோணி கண்ணன், பிரபு, அருணாதேவி, நாகராஜன், அருண்குமார், பழனி, நிக்கோலாஸ் மணி, பெருமாள், கோகுல்நாத், செல்வி, பார்வதி ஆகியோரும் பங்கேற்றனர்.

மேலும் பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மேகநாதன், மாநகர அணி நிர்வாகிகள் ஜீவன் ஜேக்கப், அருண்சுந்தர், கிறிஸ்டோபர் விஜயராஜ், ரவி, செல்வின், பால்ராஜ், மகேஸ்வரன்சிங், குமரன், சத்யா, சந்தனமாரி, டைகர் வினோத், செந்தில்குமார், நாராயணவடிவு, வினோத், சீதாராமன், சாகுல்ஹமீது, மாவட்ட பிரதிநிதி நாராயணன், கவுன்சிலர்கள் விஜயகுமார், நாகேஸ்வரி, ஜெயசீலி, பொன்னப்பன், ஜான், பட்சிராஜன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அண்ணாதுரை, பகுதி அமைப்பாளர்கள் காசிராஜன், சூர்யா, வட்டச் செயலாளர்கள் கதிரேசன், சுப்பையா, பாலகுருசாமி, கருப்பசாமி, மூக்கையா, சிங்கராஜ், பகுதி பிரதிநிதி பிரபாகர், பொருளாளர் முத்துராஜா, வட்டப்பிரதிநிதிகள் துரை, புஷ்பராஜ், மணி, மேலும் அல்பட், செல்வம், மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.