கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வட வல்லநாடு ஊராட்சி பாறைக்காடு கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.67 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து, சிறுவர் சிறுமிகளுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார்.

பின்னர், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் பொதுமக்களை சந்தித்து, கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகராஜா நயினார், வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ஜெயா, வருவாய் ஆய்வாளர் மாதவன், கருங்குளம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ் காந்தி, ஊராட்சி செயலர் கண்ணன் மற்றும் கழக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.