தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) சமூக மேம்பாட்டு திட்டம் (CDP) – TOUCH, உன்னத் பாரத் அபியான் மற்றும் ஆங்கிலத் துறை இணைந்து, (20.09.2025) அன்று இனிகோ நகர் கடற்கரையில் சுத்தம் செய்யும் நிகழ்ச்சியை நடத்தியது.
இந்த நிகழ்ச்சி காலை 6.00 மணிக்கு தொடங்கி, சுற்றுச்சூழல் சுத்தம் மற்றும் கடல்சார் உயிரியல் பாதுகாப்பின் அவசியத்தை பொதுமக்களிடையே எடுத்துக்கூறும் நோக்கில் நடைபெற்றது. மாணவிகள் தாமே கடற்கரையை சுத்தப்படுத்தி சமூகத்தில் முன்னுதாரணமாக திகழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சி கல்லூரி செயலாளர் அ.செ. டாக்டர் எஸ். குழந்தை தெரசா, முதல்வர் அ.செ. டாக்டர் ஜெஸி பெர்னாண்டோ, துணை முதல்வர் அ.செ. டாக்டர் எம். எஸ். எழிலரசி மற்றும் ஆங்கிலத் துறைத் தலைவர் டாக்டர் பி. செரீனா மார்கரெட் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.
சமூக மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் எம். ஹெர்மினா மற்றும் திருமதி ஜே. மெல்பா ஷேரன் ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக இந்நிகழ்ச்சி பொதுமக்களிடம் பாராட்டைப் பெற்றது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் மாணவிகள் முன்னெடுத்த கடற்கரை சுத்தம் – சமூக மேம்பாட்டு திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஏரல் பகுதியில் அரசு மருத்துவமனை, தொழிற்சாலை, அரசு பேருந்து சேவை கோரி ஆட்சியரிடம் மனு!!
அடுத்த
தூத்துக்குடி தமிழ் இலக்கியப் பேரவையின் 278-வது “இலக்கியம் பூக்கும் இனிய மாலை” நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026