தூத்துக்குடி மாநகராட்சி 47வது வார்டு லயன்ஸ் டவுன் பகுதியில் தனிநபர் வழக்கு தொடர்ந்ததன் காரணமாக அப்பகுதியில் உள்ள 57 வீடுகளின் பட்டா ரத்து செய்யப்பட்டு, அவை இடிக்கப்பட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் 2025 ஆம் ஆண்டின் ஏழாவது மாதத்தில் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், அப்பகுதி குடியிருப்போர் நீதியையும் நியாயத்தையும் பெறும் நோக்கில் கடந்த 19.09.2025 அன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இது தொடர்பாக இன்று காலை 10 மணி அளவில், அகில இந்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு குழு சேர்மன் லஞ்ச ஒழிப்பு பாபு அவர்கள் தூத்துக்குடி லயன்ஸ் டவுன் பகுதிக்கு நேரில் வந்து பாதிக்கப்பட்ட குடியிருப்போருடன் சந்தித்து பேசினார். மக்களின் துயரத்தை கேட்டறிந்த அவர், அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு,
“உங்களின் வீடுகளை இடிக்காமல் பாதுகாக்கும் பொறுப்பை நான் ஏற்கிறேன். உங்களுக்காக சட்ட ரீதியிலும் மனித ரீதியிலும் உறுதுணையாக இருப்பேன்” என்று உறுதியளித்தார்.

அவரது இந்த உறுதியால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். அவர்களது நம்பிக்கைக்கும் நலன்களுக்கும் ஆதரவாக லஞ்ச ஒழிப்பு பாபு அவர்கள் அளித்த உறுதி, அப்பகுதி மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையின் ஒளியாக திகழ்கிறது.