தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை முதல் பெய்து வரும் கனமழையால் தாழ்வுப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகள் இடையறாது நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஹவுசிங் போர்டு பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றும் பணிகளையும், திரேஸ்புரம் முகத்துவாரத்தில் கடலுக்கு மழைநீர் வெளியேறும் நிலைமையையும் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவருடன் பகுதி கழக செயலாளரும் மாநகர மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மலராஜ், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி ஆகியோர் மற்றும் கழக நிர்வாகிகள் இணைந்திருந்தனர்.
மழை காரணமாக பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாதபடி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும், நீரேற்ற பணிகள் முழு வேகத்தில் நடைபெறுவதாகவும் மேயர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் கனமழை காரணமான நீர்வெளியேற்றப் பணிகள் தீவிரம் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் ரத்த தான முகாம்: 35 பேர் நலனுக்காக ரத்தம் தானம் செய்தனர்!!
அடுத்த
சிபிஐ கட்சி கவுன்சிலர் தனலெட்சுமி: மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் ஆறுமுகத்திற்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026