தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளன. இதில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாகக் காணப்பட்ட எட்டையாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் மழைநீர் வெளியேற்றப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இப்பகுதியில் வழிகால்கள் மூலமாகவும் மின் மோட்டார் உதவியாலும் நீர் வெளியேறி வருவதை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைநீர் நிலையை விரைவாக கட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகளுக்கு துரித நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
பகுதி மக்கள், நீர்தேக்கம் அதிகமுள்ள பகுதிகளில் மேலும் ஒரு மின் மோட்டார் அமைத்தால் நீர் வெளியேறும் வேகம் அதிகரிக்கும் எனக் கோரிக்கை முன்வைத்தனர். இதனை கவனத்தில் கொண்ட மேயர், கூடுதல் மோட்டார் அமைப்பு உள்ளிட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
எட்டையாபுரம் ஹவுசிங் போர்டில் நீர்தேக்கத்துக்கு விரைவு நடவடிக்கை – மேயர் நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி ஹௌசிங் போர்டு பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற நடவடிக்கைகள் தீவிரம் – ஒட்டப்பிடாரம் MLA சண்முகையா நேரில் பார்வை!!
அடுத்த
மருதூர் அணைக்கட்டில் நீர்வரத்து அதிகரிப்பு: பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க ஆட்சியர் இளம் பகவத் அறிவிப்பு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026