தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஹௌசிங் போர்டு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெள்ளநீர் தேங்கியுள்ள நிலையில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மழைநீர் வெளியேற்ற பணிகள் நடைபெற்று வரும் இடங்களை பார்வையிட்ட அவர், மின் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகளை வேகப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், தேவையான பகுதிகளில் உடனடியாக கூடுதல் மின் மோட்டார்கள் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினார்.
தண்ணீரை வெளியேற்றும் பணியில் பயன்படுத்தப்படும் மின் மோட்டார்கள் தடையில்லாமல் தொடர்ந்து இயங்க தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குமாறு பொறுப்புக்கூறிய துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி உதவி பொறியாளர் ராஜேஷ்கண்ணன், பகுதி கழக செயலாளர் சிவகுமார், மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி, வட்ட செயலாளர் தெய்வேந்திரன், மாவட்ட பிரதிநிதி பூவேஷ்நாதன், அவைத்தலைவர் ராஜசேகர், பொறியாளர் அணி தர்மர், இளைஞரணி பத்மநாபன், வேல்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி ஹௌசிங் போர்டு பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற நடவடிக்கைகள் தீவிரம் – ஒட்டப்பிடாரம் MLA சண்முகையா நேரில் பார்வை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் தொடரும் கனமழை – மீன்வளக் கல்லூரி அருகே வடிகால் கால்வாயை ஆய்வு செய்த அமைச்சர் கீதா ஜீவன்!!
அடுத்த
எட்டையாபுரம் ஹவுசிங் போர்டில் நீர்தேக்கத்துக்கு விரைவு நடவடிக்கை – மேயர் நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026